2சாமுவேல் 21:1-9

21:1 தாவீதின் நாட்களில் மூன்று வருஷம் ஓயாத பஞ்சம் உண்டாயிருந்தது; அப்பொழுது தாவீது கர்த்தருடைய சமுகத்தில் விசாரித்தான்; கர்த்தர்: கிபியோனியரைக் கொன்றுபோட்ட சவுலுக்காகவும், இரத்தப்பிரியரான அவன் வீட்டாருக்காகவும் இது உண்டாயிற்று என்றார்.
21:2 அப்பொழுது ராஜா: கிபியோனியரை அழைப்பித்தான்; கிபியோனியரோ, இஸ்ரவேல் புத்திரராயிராமல் எமோரியரில் மீதியாயிருந்தவர்கள்; அவர்களுக்கு இஸ்ரவேல் புத்திரர் ஆணையிட்டிருந்தும், சவுல் இஸ்ரவேல் புத்திரருக்காகவும் யூதாவுக்காகவும் காண்பித்த வைராக்கியத்தினால் அவர்களை வெட்ட வகைதேடினான்.
21:3 ஆகையால் தாவீது கிபியோனியரைப் பார்த்து: நான் உங்களுக்குச் செய்யவேண்டியது என்ன? நீங்கள் கர்த்தருடைய சுதந்தரத்தை ஆசீர்வதிக்கும்படிக்கு, நான் செய்யவேண்டிய பிராயச்சித்தம் என்ன என்று கேட்டான்.
21:4 அப்பொழுது கிபியோனியர் அவனைப் பார்த்து: சவுலோடும் அவன் வீட்டாரோடும் எங்களுக்கு இருக்கிற காரியத்திற்காக எங்களுக்கு வெள்ளியும் பொன்னும் தேவையில்லை; இஸ்ரவேலில் ஒருவனைக் கொன்றுபோடவேண்டும் என்பதும் எங்கள் விருப்பம் அல்ல என்றார்கள். அப்பொழுது அவன் அப்படியானால், நான் உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டான்.
21:5 அவர்கள் ராஜாவை நோக்கி: நாங்கள் இஸ்ரவேலின் எல்லையிலெங்கும் நிலைக்காதபடிக்கு, அழிந்துபோக எவன் எங்களை நிர்மூலமாக்கி எங்களுக்குப் பொல்லாப்புச் செய்ய நினைத்தானோ,
21:6 அவன் குமாரரில் ஏழுபேர் கர்த்தர் தெரிந்துகொண்ட சவுலின் ஊராகிய கிபியாவிலே நாங்கள் அவர்களைக் கர்த்தருக்கென்று தூக்கிப்போட, எங்களுக்கு ஒப்புக்கொடுக்கப்படவேண்டும் என்றார்கள். நான் அவர்களை ஒப்புக்கொடுப்பேன் என்று ராஜா சொன்னான்.
21:7 ஆனாலும் தாவீதும் சவுலின் குமாரனாகிய யோனத்தானும் கர்த்தரைக்கொண்டு இட்ட ஆணையினிமித்தம், ராஜா சவுலின் குமாரனாகிய யோனத்தானின் மகன் மேவிபோசேத்தைத் தப்பவிட்டு,
21:8 ஆயாவின் குமாரத்தியாகிய ரிஸ்பாள் சவுலுக்குப் பெற்ற அவளுடைய இரண்டு குமாரராகிய அர்மோனியையும், மேவிபோசேத்தையும், சவுலின் குமாரத்தியாகிய மீகாள் மேகோலாத்தியனான பர்சிலாவின் குமாரனாகிய ஆதரியேலுக்குப்பெற்ற அவளுடைய ஐந்து குமாரரையும் பிடித்து,
21:9 அவர்களைக் கிபியோனியர் கையில் ஒப்புக்கொடுத்தான்; அவர்களைக் கர்த்தருடைய சமுகத்தில் மலையின்மேல் தூக்கிப்போட்டார்கள்; அப்படியே அவர்கள் ஏழுபேரும் ஒருமிக்க விழுந்தார்கள்; வாற்கோதுமை அறுப்பு துவக்குகிற அறுப்புக்காலத்தின் முந்தினநாட்களிலே அவர்கள் கொன்றுபோடப்பட்டார்கள்.




Related Topics



கிபியோனியர்கள் மற்றும் உடன்படிக்கை-Rev. Dr. J.N. Manokaran

கிபியோன் எருசலேமுக்கு வடக்கே உள்ள ஒரு பழமையான கானானிய நகரம்.  கிபியோனில் வசிப்பவர்கள் ஏவியர்கள் மற்றும் எமோரியர்கள்.  (யோசுவா 10:12; 11:19; II சாமுவேல் 21: 2)....
Read More




உடன்படிக்கை மற்றும் ஏமாற்றுதல்-Rev. Dr. J.N. Manokaran

பெரியோர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு திருமணம். மணமகன் வீட்டில் அனைத்து உண்மையான தகவல்களையும் அளிக்கவில்லை.  மணமகனுக்கு தனது சொந்த கிராமத்தில்...
Read More



தாவீதின் , நாட்களில் , மூன்று , வருஷம் , ஓயாத , பஞ்சம் , உண்டாயிருந்தது; , அப்பொழுது , தாவீது , கர்த்தருடைய , சமுகத்தில் , விசாரித்தான்; , கர்த்தர்: , கிபியோனியரைக் , கொன்றுபோட்ட , சவுலுக்காகவும் , இரத்தப்பிரியரான , அவன் , வீட்டாருக்காகவும் , இது , உண்டாயிற்று , என்றார் , 2சாமுவேல் 21:1 , 2சாமுவேல் , 2சாமுவேல் IN TAMIL BIBLE , 2சாமுவேல் IN TAMIL , 2சாமுவேல் 21 TAMIL BIBLE , 2சாமுவேல் 21 IN TAMIL , 2சாமுவேல் 21 1 IN TAMIL , 2சாமுவேல் 21 1 IN TAMIL BIBLE , 2சாமுவேல் 21 IN ENGLISH , TAMIL BIBLE 2SAMUEL 21 , TAMIL BIBLE 2SAMUEL , 2SAMUEL IN TAMIL BIBLE , 2SAMUEL IN TAMIL , 2SAMUEL 21 TAMIL BIBLE , 2SAMUEL 21 IN TAMIL , 2SAMUEL 21 1 IN TAMIL , 2SAMUEL 21 1 IN TAMIL BIBLE . 2SAMUEL 21 IN ENGLISH ,