2நாளாகமம் 34:22-28

34:22 அப்பொழுது இல்க்கியாவும் ராஜா அனுப்பின மற்றவர்களும் அஸ்ராவின் குமாரனாகிய திக்வாதின் மகனான சல்லூம் என்னும் வஸ்திரசாலை விசாரிப்புக்காரன் மனைவியாகிய உல்தாள் என்னும் தீர்க்கதரிசியானவளிடத்திற்குப் போனாள்; அவள் எருசலேமில் இரண்டாம் வகுப்பிலே குடியிருந்தாள்; அவளோடே அதைப்பற்றிப் பேசினார்கள்.
34:23 அவள் இவர்களை நோக்கி: உங்களை என்னிடத்தில் அனுப்பினவருக்கு நீங்கள் சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறதாவது,
34:24 இதோ, யூதாவின் ராஜாவுக்கு முன்பாக வாசிக்கப்பட்ட புஸ்தகத்தில் எழுதியிருக்கிற சகல சாபங்களுமாகிய பொல்லாப்பை நான் இந்த ஸ்தலத்தின்மேலும் இதின் குடிகளின்மேலும் வரப்பண்ணுவேன்.
34:25 அவர்கள் என்னைவிட்டு, தங்கள் கைகளின் கிரியைகள் எல்லாவற்றிலும் எனக்குக் கோபம் உண்டாக்க வேறே தேவர்களுக்குத் தூபங்காட்டினபடியினால், என் உக்கிரம் அவிந்துபோகாதபடி இந்த ஸ்தலத்தின்மேல் இறங்குமென்று கர்த்தர் உரைக்கிறார்.
34:26 கர்த்தரிடத்தில் விசாரிக்கிறதற்கு உங்களை அனுப்பின யூதாவின் ராஜாவினிடத்தில் நீங்கள் போய்: நீ கேட்ட வார்த்தைகளைக்குறித்து இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்,
34:27 இந்த ஸ்தலத்திற்கும் அதின் குடிகளுக்கும் விரோதமாக தேவன் சொன்ன அவருடைய வார்த்தைகளை நீ கேட்கையில், உன் இருதயம் இளகி, எனக்கு முன்பாக நீ உன்னைத் தாழ்த்தி, எனக்கு முன்பாகப் பணிந்து, உன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, எனக்கு முன்பாக அழுதபடியினால், நானும் உன் விண்ணப்பத்தைக் கேட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
34:28 இதோ, நான் இந்த ஸ்தலத்தின்மேலும் இதின் குடிகளின்மேலும் வரப்பண்ணும் எல்லாப் பொல்லாப்பையும் உன் கண்கள் காணாதபடிக்கு, நீ சமாதானத்தோடே உன் கல்லறையில் சேர்த்துக்கொள்ளப்பட, நான் உன்னை உன் பிதாக்களண்டையிலே சேரப்பண்ணுவேன் என்கிறார் என்று சொன்னாள்; அவர்கள் ராஜாவுக்கு மறுசெய்தி கொண்டுபோனார்கள்.




Related Topics



உல்தாள், ஒரு தீர்க்கதரிசி-Rev. Dr. J .N. மனோகரன்

உல்தாள் (கிமு 640 முதல் 564 வரை) ஒரு தனித்துவமான பெண் தீர்க்கதரிசி, ஏனெனில் ஒரு பெண்ணின் தீர்க்கதரிசனங்கள் வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதென்றால்...
Read More



அப்பொழுது , இல்க்கியாவும் , ராஜா , அனுப்பின , மற்றவர்களும் , அஸ்ராவின் , குமாரனாகிய , திக்வாதின் , மகனான , சல்லூம் , என்னும் , வஸ்திரசாலை , விசாரிப்புக்காரன் , மனைவியாகிய , உல்தாள் , என்னும் , தீர்க்கதரிசியானவளிடத்திற்குப் , போனாள்; , அவள் , எருசலேமில் , இரண்டாம் , வகுப்பிலே , குடியிருந்தாள்; , அவளோடே , அதைப்பற்றிப் , பேசினார்கள் , 2நாளாகமம் 34:22 , 2நாளாகமம் , 2நாளாகமம் IN TAMIL BIBLE , 2நாளாகமம் IN TAMIL , 2நாளாகமம் 34 TAMIL BIBLE , 2நாளாகமம் 34 IN TAMIL , 2நாளாகமம் 34 22 IN TAMIL , 2நாளாகமம் 34 22 IN TAMIL BIBLE , 2நாளாகமம் 34 IN ENGLISH , TAMIL BIBLE 2chronicles 34 , TAMIL BIBLE 2chronicles , 2chronicles IN TAMIL BIBLE , 2chronicles IN TAMIL , 2chronicles 34 TAMIL BIBLE , 2chronicles 34 IN TAMIL , 2chronicles 34 22 IN TAMIL , 2chronicles 34 22 IN TAMIL BIBLE . 2chronicles 34 IN ENGLISH ,