லூக்கா அதிகாரம் 18 -விளக்கவுரை
முக்கியக் கருத்து: சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும். லூக்கா 18 ஜெபத்தைப் பற்றி இரண்டு உவமைகளோடு தொடங்குகிறது. ஒன்று விடா ஜெபத்தை, இன்னொன்று தாழ்மையான ஜெபத்தை காட்டுகிறது. பிறகு பணக்கார இளைஞன், குருட்டு பிக்ஷக்காரன் — இவர்களும் ஜெபத்தை, விசுவாசத்தை காட்டுகிறார்கள். 1. (வச.1-8) — விதவையும் நியாயாதிபதியும்: விடாமல் கேள் ஒரு பட்டணத்தில் தேவனுக்கு பயப்படாத நியாயாதிபதி இருந்தான். ஒரு விதவை வந்து — என் விரோதி விஷயத்தில் எனக்கு நியாயம் செய். அவன் தாமதித்தான். ஆனால் அவள் விடவில்லை — தொடர்ந்து வந்தாள். கடைசியில் சொன்னான் — இவள் என்னை தொல்லைப்படுத்துகிறாள், நியாயம் செய்கிறேன். தேவன் இதை விட நீதியானவர் — விடாமல் கேட்பவர்களுக்கு நியாயம் செய்வார். "சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதைக் குறித்து அவர்களுக்கு அவர் ஒரு உவமையைச் சொன்னார்" — லூக்கா 18:1 → 1 தெசலோனிக்கேயர் 5:17 — இடைவிடாமல் ஜெபியுங்கள். இன்று நமக்கு: ஜெபம் கேட்கப்படவில்லை என்று தோன்றும்போதும் — விடாமல் தொடருங்கள், தேவன் கேட்கிறார். 2. (வச.9-17) — பரிசேயனும் ஆயக்காரனும்: தாழ்மையான ஜெபம் தன்னை நீதிமான் என்று நம்பி மற்றவரை இகழ்ந்தவர்களுக்காக சொன்னார். பரிசேயன் நின்று: நான் கொள்ளையடிக்கிறவன் அல்ல, அநீதியுள்ளவன் அல்ல, விபசாரி அல்ல, இந்த ஆயக்காரனைப்போல் இல்லை; வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன், சம்பாதிப்பதின் தசமபாகம் கொடுக்கிறேன் என்று தேவனிடம் சொன்னான். ஆயக்காரன் தூரத்தில் நின்று, வானத்தை நோக்க கண்களை ஏறெடுக்க கூட மனதில்லாமல், தன் மார்பை அடித்துக்கொண்டு: தேவனே, பாவியாகிய என்னை தயவு செய்யும் என்றான். இவனே நீதிமானாக்கப்பட்டு வீட்டுக்கு போனான், அவன் அல்ல. "தேவனே, பாவியாகிய என்னை தயவுசெய்யும் என்றான்" — லூக்கா 18:13 → சங்கீதம் 51:17 — நொறுங்கின இருதயமே தேவனுக்கு பலி; நொறுங்கின மனதையும் நொறுங்கின இருதயத்தையும் தேவன் அசட்டை செய்யார். இன்று நமக்கு: ஜெபிக்கும்போது — பரிசேயனைப்போல் அல்ல, ஆயக்காரனைப்போல் தாழ்மையோடு ஜெபியுங்கள். 3. (வச.35-43) — குருட்டு பிக்ஷக்காரன்: விடாமல் கத்தினான் எரிகோவுக்கு சமீபமாக ஒரு குருடன் வழியோரத்தில் உட்கார்ந்திருந்தான். கூட்டம் போகிறது என்று கேட்டான். இயேசு நாசரேயன் போகிறார் என்று சொன்னார்கள். தாவீதின் குமாரனே, எனக்கு இரக்கம் வையும் என்று கத்தினான். கூட்டம் அமைதியாயிரு என்று சொன்னது. அவன் இன்னும் அதிகமாய் கத்தினான். இயேசு நின்றார். அவனை கொண்டுவரும்படி கட்டளையிட்டார் — உனக்கு என்ன வேண்டும்? ஆண்டவரே, பார்வை பெறவேண்டும். இயேசு சொன்னார் — பார்வை பெறு, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது. உடனே பார்வை பெற்றான், தேவனை மகிமைப்படுத்தி அவரை பின்பற்றினான். "இயேசு அவனை நோக்கி: கண்பார்வை பெறு, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார்" — லூக்கா 18:42 → எபிரேயர் 11:6 — விசுவாசமில்லாமல் தேவனுக்கு பிரியமாயிருப்பது கூடாது. இன்று நமக்கு: மனித தடைகள் இருந்தாலும் விடாமல் கர்த்தரிடம் கேளுங்கள் — அவர் கேட்கிறார், கொடுக்கிறார்.
Author: Tamilbiblesearch