விசுவாசிகள் விசுவாசத்தின்படி நடக்க வேண்டும் என்று பவுல் அறிவுறுத்துகிறார் (2 கொரிந்தியர் 5:7). அதாவது, காணப்படுவதிலும், கணிப்பிடக்கூடியதிலும், கட்டுப்படுத்தக்கூடியதிலும் அல்லாமல், தேவனை நம்பிக்கையுடன் விசுவாசித்தல் ஆகும். இது ஒரு தெய்வீகமான கண்ணோட்டத்தைக் கொண்டிருப்பதையும், உறுதியாக நிலைத்திருப்பதையும், தேவனுடன் ஆற்றல்மிக்க உறவைக் கொண்டிருப்பதையும் குறிக்கிறது. பேதுரு கடலில் நடந்த நிகழ்வு, விசுவாசத்தில் நடக்கும் ஐந்து முக்கியக் கொள்கைகளை வெளிப்படுத்துகிறது (மத்தேயு 14:25-33).
அவருடைய வார்த்தையைக் கேட்டல்:
படகில் பயந்துபோன சீஷர்களுடன் கர்த்தர் பேசினார், அவர்கள் பயப்படாமல் மகிழ்ச்சியுடன் இருக்கும்படி உற்சாகப்படுத்தினார். பேதுரு கேட்டபோது, நீரின்மேல் நடக்க அழைப்பைப் பெற்றான். அவன் தண்ணீரில் நடப்பதன் மூலம் அழைப்புக்குக் கீழ்ப்படிந்தான். இது வெறும் ஒரு அழைப்பு மட்டும் இல்லை; மாறாக, மனித சக்திக்குப் புறம்பான ஒன்றை செய்யும் வாக்குறுதியாகும். ஒரு விசுவாசி தேவனுடைய உற்சாகமளிக்கும் சத்தத்தைக் தொடர்ந்து கேட்டு, அதில் நிலைத்திருக்க வேண்டும். பேதுரு நீரின் மேல் நடக்கத் தூண்டப்பட்டதைப் போலவே, தேவன் தனது ஜனங்களை பெரிய செயல்களுக்கு உத்வேகம் அளிக்கிறார். வேதாகமம் விசுவாசிகளை மாபெரும் காரியங்களைச் செய்ய ஊக்குவிக்கிறது.
இயேசுவின் மீது கவனம் செலுத்துதல்:
பேதுருவின் ஒரே கவனமும் இலக்கும் கர்த்தரே. அந்த இருண்ட மேகமூட்டமான இரவில், வேறு எதையும் காண முடியாது. இயேசுவே ஒளி; ஆகையால், அவர் ஒளியில் நடக்க வேண்டும். அவர் ஒவ்வொரு விசுவாசியையும் வெளிச்சமாக்கி, ஒளியில் நடக்க ஊக்குவிக்கிறார் (யோவான் 1:9).
அவரை நோக்கி தொடர்ந்து முன்னேறுதல்:
கர்த்தரை காண்பது மட்டும் போதாது; பேதுரு தொடர்ந்து அவரைப் நோக்கி முன்னேற வேண்டும். மற்ற சீஷர்கள் அமர்ந்து பார்க்கலாம், ஆனால் பேதுரு நடக்க வேண்டும். நிற்பது என்பது மூழ்குவதைக் குறிக்கிறது என்பதால் அவர் நிற்க முடியாது, எனவே, அவர் நடக்க வேண்டும். கிறிஸ்துவ வாழ்க்கை என்பது அன்பிலும், கிருபையிலும், ஞானத்திலும் முன்னேறுவதும், ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக் கொண்டு பரலோக அழைப்பை நோக்கி நடப்பதாகும்.
அவரில் கவனம் சிதறாமல் இருத்தல்:
பேதுரு கவலைக்கீழ்ப்பட்டார், கவனச்சிதறலுக்குள்ளானார், மேலும் கொந்தளிக்கும் கடலைக் கண்டு பயந்துவிட்டார். அவர் தன் கவனத்தை இயேசுவில் இருந்து விலக்கிக்கொண்டபோது, ஆழமான கடலில் மூழ்குவதற்கான அபாயத்தையும் மரணத்தையும் பார்த்தார்.
அவரை ஆபத்து காலத்தில் கூப்பிடுதல்:
பேதுரு உடனே கர்த்தரை கூப்பிட்டார்; உடனே கர்த்தர் தன் கரத்தை நீட்டி அவரை உயர்த்தினார். "என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்” (எரேமியா 33:3). சீஷர்கள் உலகில் இருக்கும்போது சோதனைகள், சங்கடங்கள், சிரமங்கள், நெருக்கடிகள் ஆகியவற்றை சந்திக்க நேரிடும். ஆனாலும், நம்மை விடுவிக்கக் கூடிய மீட்பராகிய கர்த்தரைத் தேடிக்கொள்ள வேண்டும்.
நான் விசுவாசத்தில் நடக்கிறேனா?
Rev. Dr. J.N. Manokaran