ஆவிக்குரிய மூன்று அம்சங்கள்

ஏறக்குறைய எல்லா கலாச்சாரங்களிலும், கொடுப்பது, உபவாசம் (விரதம்) இருப்பது மற்றும் வேண்டுதல் செய்வது நல்ல செயல்களாக கருதப்படுகிறது.  உலகில் உள்ள பெரும்பாலான மக்கள் இந்த மூன்றும் முக்கியமான ஆன்மீகச் செயல்களாக கருதுகின்றனர். அதிலும்   இந்த வகையான நல்ல செயல்களால் தங்கள் இரட்சிப்பைப் பெற முடியும் என்று அவர்கள் ஒரு கட்டுக்கதையை நம்புகிறார்கள்.   மனித கண்ணோட்டத்தில், அவை நீதியான செயல்களாக இருக்கலாம், ஆனால் உண்மையில் அழுக்கான கந்தை அல்லது மாதவிடாய் ஆடைகள் போன்றவை என்று ஏசாயா தீர்க்கதரிசி அறிவித்தார் (ஏசாயா 64:6). கொர்னேலியவைப் போலவே உண்மையான கடவுளிடம் ஒரு நபர் வழிநடத்தப்படுவதற்கு வேண்டுமானால் இந்த செயல்கள் உதவக்கூடும் (அப்போஸ்தலர் 10: 1-2). கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தேவனைப் பிரியப்படுத்தாத தீய உள்நோக்கங்களுடனான இத்தகைய செயல்களைக் கண்டனம் செய்தார்  (மத்தேயு 6:1-8 ). கர்த்தராகிய இயேசுவில் விசுவாசம் கொள்ளாமல், செய்யப்படும் எல்லா செயல்களும் பயனற்றவையே. 

கொடுத்தல்:  
கடவுளுக்குக் கொடுப்பதும், ஏழை எளியோருக்குக் கொடுப்பதும் வேதாகமத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.   இரக்கத்தோடும் பெருந்தன்மையோடும்  ஏழைகளுக்கு இலவசமாகப் பொருள்களைக் கொடுக்கிறான். அவனது நன்மை என்றென்றைக்கும் தொடரும் (சங்கீதம் 112:9; 2 கொரிந்தியர் 9:9). பல மதங்களில் தானம் செய்வது கடவுளிடமிருந்து தகுதிகளைப் பெறும் செயல்களாகக் கருதப்படுகிறது.   சில மதங்களில், விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு உணவளிப்பது ஒரு தகுதியாக கருதப்படுகிறது.  இருப்பினும், தேவன் தனது சீஷர்களுக்கு அநாமதேயமாக (முன்பின் அறியாதவர்களுக்கு) கொடுக்கும் கொள்கையை கற்பித்தார்.   வலது கை என்ன கொடுக்கிறது என்பதை இடது கை அறியக்கூடாது.   கொடுப்பதை விளம்பரப்படுத்தக் கூடாது. 

விரதம்/உபவாசம்: 
சில மதங்களில் விரதம் அல்லது உணவைத் தவிர்ப்பது முக்திக்கான தவங்களில் ஒன்றாகும்.  உபவாசம் என்பது தேவனை அச்சுறுத்துவதற்கோ அல்லது அவரை வற்புறுத்துவதற்காகவோ அல்ல.  உபவாசமிருப்பது மனத்தாழ்மையை, கவனம் செலுத்துவதை, தேவனுடைய பணியை மனிதர்கள் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை காட்டுகிறது. உபவாசம் இருப்பவர்கள் தேவனுடன் இரகசியமாக பேச வேண்டும், மூடிய அறைக்குள் இருந்து வேண்டுதல் செய்ய வேண்டும், ஆனால் பகிரங்கமாக பதில் பெற வேண்டும்.  

பிரார்த்தனை/ஜெபம்:  
மக்கள் அலங்கார வார்த்தைகளால் ஜெபிக்க விரும்புகிறார்கள், அவை வெற்று சொற்றொடர்கள் அல்லது வீணான வார்த்தைகள் என்று தேவனால் அழைக்கப்படுகின்றன.   சில வார்த்தைகளைத் திரும்பத் திரும்பக் கூறுவது, சத்தமிடுவது என தேவனின் கவனத்தை ஈர்க்க செய்வதாகும். ஜெபம் என்பது தேவனுடனான உரையாடலாகும், இது மத்தியஸ்தராக இருக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் ஒரு உறவை அடிப்படையாகக் கொண்டது. 

பாராட்டு மற்றும் கைதட்டல்: 
 மனிதர்களிடமிருந்து பாராட்டுகளைப் பெற விரும்புபவர்கள் நிச்சயமாக அதைப் பெறுவார்கள், தேவனின் அங்கீகாரத்தை அல்ல.

 ஆவிக்குரிய ஒழுக்கத்துடன் கூடிய விசுவாசம் எனக்கு தேவன் மீது உள்ளதா? 

Rev. Dr. J.N. Manokaran