வரலாற்றில் இறையாண்மை தேவனின் ஆட்சி

"காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனை தேவன் அனுப்பினார்" (கலாத்தியர் 4:5).  

நேபுகாத்நேச்சாரின் கனவை தானியேல் விளக்கினார். தேவன் ஒரு இறையாண்மை ஆட்சியாளர் மற்றும் அனைத்து ராஜ்யங்கள் அல்லது பேரரசுகள் அவரது நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டிருந்தன.

 1) தங்கம் – பாபிலோன் (கிமு 605-538):
நேபுகாத்நேச்சார் இஸ்ரவேலை தோற்கடித்து, ஏராளமான யூதர்களை பாபிலோனுக்கு சிறைபிடித்துச் சென்றார்.  சிறைபிடிப்பு 70 ஆண்டுகள் இருக்கும் என்று எரேமியா முன்னறிவித்தார்.  பாபிலோனிய சிறையிருப்பு தேசத்தையே மாற்றியது.  அதில் ஒரு நன்மை என்னவென்றால் அவர்கள் சிலை வழிபாட்டை நிராகரித்தனர்;  சடங்குகளில் இருந்து ஜெபத்திற்கு கவனம் திரும்பியது;  ஆவிக்குரிய வாழ்வின் மையம் ஆலயம் என்பதில் இருந்து தோராவிற்கு (வேதம்) மாற்றப்பட்டு ஓய்வுநாள் கொண்டாட்டத்திற்கு உறுதியளிக்கப்பட்டது.  மேசியா வருவதற்கு தேசம் தயாராக இருந்தது.  ஜெப ஆலயங்கள் என்ற கருத்து புலம்பெயர் யூதர்களிடையே பொதுவானதாக மாறியது, இது பவுலின் அருட்பணியின் மூலம் நற்செய்தி பிரசங்கத்திற்கான ஊக்கமாக மாறியது.

 2) வெள்ளி – மேதிய-பெர்சியா (கிமு 538-333):
கிமு 539 இல் கோரேசு யூதர்களை வாக்களிக்கப்பட்ட தேசத்திற்குத் திரும்ப வர அனுமதித்தார்.  ஆலயம் மீண்டும் கட்டப்பட்டது, எருசலேமின் சுவர்கள் மீண்டும் கட்டப்பட்டன, தோரா பரிசேயர்கள் மற்றும் வேதபாரகர்களால் கற்பிக்கப்பட்டது.

 3) பித்தளை – கிரேக்கு தேசம் (கிமு 333-27):
மகா அலெக்சாந்தரின் வெற்றிகளை  உலகம் அறிந்ததே.  இது அரசியல் ஆட்சி மட்டுமல்ல, கலாச்சார செல்வாக்கும் உலகை மாற்றியது.  கிரேக்க சிந்தனைகளும் கிரேக்க மொழியும் உலகம் முழுவதும் பொதுவான மொழியாக மாறியது. அதன் விளைவு தான் புதிய ஏற்பாடு கிரேக்க மொழியில் எழுதப்பட்டது.

4) இரும்பு - ரோம் (கிமு 27-கிபி 476):
ரோமானிய ஆட்சி பல நாடுகளை ஒன்றிணைத்தது மற்றும் சிறந்த சாலை இணைப்புகளை உருவாக்கியது.  ரோமானியப் பேரரசின் அனைத்து மூலைகளிலும் சுவிசேஷத்தை எடுத்துச் செல்ல இந்த பாதுகாப்பான சாலைகள் பவுலுக்கு வழி வகுத்தன. அகஸ்து இராயன் கட்டளையிட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு, கர்த்தராகிய இயேசு பெத்லகேமில் பிறப்பார் என்ற தீர்க்கதரிசனம் நிறைவேற வழி வகுத்தது.

பாபிலோனியப் பேரரசு யூத மக்கள் மனந்திரும்பவும் தேவனுடன் ஒப்புரவாகவும் உதவியது.  மேதிய-பாரசீகப் பேரரசு தேசத்தை மீண்டும் கட்டியெழுப்ப இடம் கொடுத்தது, இதனால் கர்த்தராகிய இயேசு தம் மக்கள் மத்தியில் ஊழியம் செய்ய முடியும்.  கிரேக்கப் பேரரசு கிரேக்க மொழியில் நற்செய்தியைத் தெரிவிக்க உலகைத் திறந்தது.  ரோமானியப் பேரரசின் அனைத்து திசைகளையும் அடைய ரோம் சுவிசேஷத்திற்கு வழி வகுத்தது.

உலகம் ஆயத்தமாக இருந்த நிலையில் பிதாவினால் மாம்சமான ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பிறந்தார்.

 வரலாற்றின் ஆண்டவரை நான் போற்றி துதிக்கிறேனா?

 

Author: Rev. Dr. J .N. மனோகரன்