கர்த்தரை நேசிப்பதற்கான காரணங்கள்

தாவீது ராஜா, கர்த்தரை நோக்கி தம் அன்பை வெளிப்படுத்துகிறார். பழைய ஏற்பாட்டில் இதுவே உயர்ந்த அன்பின் வெளிப்பாடாகக் கருதப்படுகிறது. தாவீது, கர்த்தரை நேசிக்கத் தூண்டும் ஒன்பது காரணங்களை இங்கு கூறுகிறார் (சங்கீதம் 18:1–3). இந்த சங்கீதம் தாவீதின் வெற்றிப் பாடலாகும்.

வலிமை:
வலிமையின் தேவன், தம்மை எதிர்த்துள்ள எதிரிகளைச் சமாளிக்க தாவீதுக்கு ஆற்றலை அளித்தார். மேலும், அந்த எதிரிகளை வெல்வதற்கான திறமையையும் அவர் வழங்கினார். வலிமையுடன் துணிவும் வருகிறது, அது பெரிய ஆபத்துகளை எதிர்கொண்டு, பலத்த எதிரிகளை எதிர்த்து, வெற்றி பெறும் தைரியத்தை அளிக்கிறது.

பாறை:
முதலில், பாறை என்பது உதவியைச் சுட்டிக்காட்டுகிறது. இரண்டாவது, பாறை, வனாந்தரத்தில் கடும் வெயிலில் இருந்து நிழலை வழங்குகிறது (எசாயா 32:2). மூன்றாவது, பாறை அதன் வெடிப்புகளிலும் பிளவுகளிலும் தங்குமிடம் வழங்குகிறது (யாத்திராகமம் 33:22; நீதிமொழிகள் 30:26). நான்காவது, அது உறுதியும் பரந்ததுமான நிலையை அளிக்கிறது; மூழ்கும் மணல் அல்லது சேற்று களிமண்ணைப்போல இல்லாமல், நிற்கவும் போராடவும் ஏற்றதாகவும் மற்றும் உறுதியாகவும் இருக்கும் (சங்கீதம் 40:2).

கோட்டை:
கர்த்தருடைய நாமம் வலிமையான கோபுரமாகும்; நீதிமான்கள் அதில் ஓடிச் சென்று பாதுகாப்படைகிறார்கள் (நீதிமொழிகள் 18:10). கோட்டை என்பது நன்கு பாதுகாக்கப்பட்டவை மற்றும் எதிரிகளால் ஊடுருவ முடியாதவை. எதிரிகள் தாக்கலாம், முற்றுகை இடலாம்; ஆனால் பல மாதங்கள் தாக்கினாலும், கோட்டைகளை உடைக்க முடியாது.

விடுவிப்பு:
கர்த்தர் பலவிதமான வழிகளில் தம்முடைய ஜனங்களை விடுவிக்கிறார். சில சமயங்களில் அது தப்பிக்கும் வழியை உருவாக்குவதாகவோ அல்லது எதிரிகளை இயற்கைக்கு அப்பாற்பட்ட முறையில் தண்டிப்பதாகவோ இருக்கலாம். எகிப்து மக்களும் 600 ரதங்களோடுகூட இஸ்ரவேலரை துரத்தினபோது, தேவன் செம்மையாக செங்கடலைப் பிளந்து வழி ஏற்படுத்தி, பின்னர் அந்த வழியே வந்த எகிப்தியரை கடலில் மூழ்கடித்து அழித்தார்.

தேவன்
தாவீது தேவனைத் தனது வணக்கத்திற்கும் ஆராதனைக்கும் உரிய ஒரே தெய்வமாகப் புகழ்ந்தார். தேவன் சிருஷ்டிகர், சர்வவல்லமையுள்ள ஆட்சியாளர், தாவீதின் ஆத்துமாவில் பெலனைத் தருபவர்.

வலிமையின் மூலாதாரம் (ஊற்றாகிய தேவன்):
 இங்கேப் பயன்பட்ட எபிரேயச் சொல், “ஊற்று,” “மூலாதாரம்,” அல்லது “தோற்றம்” என்ற அர்த்தம் கொண்டது.
 தாவீதுக்கு, தேவனே ஒரே வலிமையின் ஊற்று, ஆம், சக்தி, பொறுமை, தைரியம், வழிகாட்டுதல் மற்றும் ஞானம் ஆகிய அனைத்திற்கும் தேவனே ஒரே ஆதாரமாக இருந்தார்.

கவசம்:
எதிரியின் எரியும் அம்புகளிலிருந்து தாவீதை காப்பது தேவனே. தேவன், தாவீதின் மனதைப் புதுப்பித்து அவனது தலைக்கு பாதுகாப்பும், இரட்சிப்பின் ஆனந்தத்தை அளித்து அவனது இருதயத்தையும் பாதுகாப்பார்.

கொம்பு:
இது, தேவனே தாவீதின் உயர்ந்த வலிமையும், உயர்த்தப்பட்ட பாதுகாப்பும், எதிரியின் தாக்குதல்களிலிருந்து தப்பிக்கும் கோட்பாடும் என்பதைக் குறிக்கிறது.

கோபுரம் (அடைக்கலம்):
இச்சொல், உயர்ந்த அரண்மனைக் கோபுரத்தை சுட்டிக்காட்டுகிறது. அங்கிருந்து எதிரியை தொலைவில் காண முடியும்; பாதுகாப்பைப் பெறலாம்; மேலும் எதிரியை எதிர்க்கும் தாக்குதலும் மேற்கொள்ள முடியும்.

 நான் தாவீதைப் போல கர்த்தரை நன்கு அறிந்த நபராக அவரை நேசிக்கிறேனா? 

Rev. Dr. J.N. Manokaran