லீதியாள்: ஒரு பெண் தொழில்முனைவோர்; விருந்தோம்பலில் சிறந்து விளங்கியவர்

லீதியாள், ஒரு வெற்றிகரமான பெண் தொழில்முனைவோர்; வேதாகமத்தில் இடம்பெற்றுள்ள செல்வாக்குமிக்க பெண்களில் ஒருவராவார். பவுலின் இரண்டாவது நற்செய்திப் பயணத்தின்போது, பிலிப்பி நகரில் அவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சீஷராக மாறினாள் (அப்போஸ்தலர் 16:13-15).

தியத்தீராவிலிருந்து பிலிப்பிக்குக் குடியேறியவர்
லீதியாள் பூர்வீகமாக தியத்தீரா நகரத்தைச் சேர்ந்தவர். அந்நகரம் சாயங்கள் / வண்ணநூல் மற்றும் துணி வகைகளுக்குப் பெயர் பெற்றிருந்தது. அங்கேயே அவர் தனது தொழில்சார் திறன்களை வளர்த்துக்கொண்டார். தொழில் செய்வதற்காக அவர் பிலிப்பி நகருக்குக் குடியேறினார். தியத்தீராவிலிருந்து துணிகளை இறக்குமதி செய்து, பிலிப்பி நகரில் அவற்றை விற்பனை செய்தார்.

விலையுயர்ந்த ஆடம்பரப் பொருட்கள்
கடல் நத்தைகளிலிருந்து பெறப்படும் ‘ஊதா’ நிறச் சாயம் பூசப்பட்ட ஆடைகள் போன்ற விலையுயர்ந்த பொருட்களை லிதியா விற்பனை செய்தார். செல்வந்தர்கள், அதிகாரம் படைத்தோர் மற்றும் உயர்குடியினர் மட்டுமே பயன்படுத்தக்கூடிய இத்தகைய ஆடம்பரப் பொருட்களை அவர் சந்தைப்படுத்தியதால், அந்நகரில் அவர் மிகுந்த செல்வாக்குடன் திகழ்ந்தார்.

பிலிப்பியில் யூத ஜெப ஆலயம் இல்லை
பிலிப்பி நகரில் ஒரு யூத ஜெப ஆலயத்தைக் கட்டும் அளவிற்குப் போதுமான எண்ணிக்கையில் யூத மக்கள் வசிக்கவில்லை. யூத ஜெப ஆலயம் இல்லாத சூழலில், அவர்கள் கடற்கரைகள் அல்லது தோட்டங்களைப் போன்ற சில திறந்தவெளிகளில் கூடி ஆராதனை செய்வது வழக்கம். எனவே, ஓய்வுநாளில் அவர்கள் ஆற்றங்கரையில் கூடினர். யூதர்களின் வாழ்க்கை முறையை நன்கு அறிந்திருந்த பவுல், நற்செய்தியை அறிவிப்பதற்காக யூதர்களைத் தேடி அந்த ஆற்றங்கரைக்குச் சென்றார்.

லீதியாள் கற்பிக்கும் சில வாழ்க்கைப்பாடங்கள்

ஆவிக்குரிய வாழ்வு:
அவர் சத்தியத்தைத் தேடும் ஒருவராக இருந்தார்; மரபுகளுக்கும் சம்பிரதாயங்களுக்கும் அடிமையாக இருக்கவில்லை. தேவன் அவருடைய இருதயத்தைத் திறந்தார்; அவர் நற்செய்தியை ஏற்றுக்கொண்டார், மனந்திரும்பினார், பின்னர் ஞானஸ்நானம் பெற்றார். ஐரோப்பியக் கண்டத்திலேயே இயேசுவை ஏற்றுக்கொண்ட முதல் நபராக அவர் திகழ்ந்தார்.

தொழில்முறை வாழ்வு:
அவர் தனது தொழிலில் மிகச் சிறந்து விளங்கினார். சக தொழில்முனைவோர் மற்றும் சமுதாயத்தினரிடையே அவர் மிகுந்த மதிப்பையும் மரியாதையையும் பெற்றிருந்தார்.

தொழில்முனைவோர்:
ஐந்து மற்றும் இரண்டு தாலந்துகளைப் பெற்று, அவற்றை இரட்டிப்பாக்கிய ஆண்களைப் போலவே, லீதியாளும் தனது செல்வத்தைப் பன்மடங்கு பெருக்கினார். தனது தொழிலின் வளர்ச்சிக்காக, தியத்தீரா எனும் ஒரு நகரத்திலிருந்து பிலிப்பி எனும் மற்றொரு நகரத்திற்குப் புலம்பெயரும் துணிச்சலை அவர் கொண்டிருந்தார். அது அவர் மேற்கொண்ட ஒரு மிகப்பெரிய சாகச முயற்சியாக (risk) அமைந்திருந்தாலும், அதில் அவர் முழுமையான வெற்றியை ஈட்டினார்.  அவள் மற்றவர்களுக்காகச் சம்பாதிக்கவும், தாராளமாகவும் தியாகத்துடனும் செலவிடவும் மனமுடன் இருந்தாள்.

விருந்தோம்பல்:
லீதியாள் நற்செய்திச் செய்தியை விசுவாசத்தோடு ஏற்றுக்கொண்டு, தன் வீட்டாரோடு ஞானஸ்நானம் பெற்றாள். பவுல், சீலா, தீமோத்தேயு மற்றும் லூக்கா ஆகியோர் வெளியிலே தங்குவதற்குப் பதிலாக, தன் வீட்டிலேயே தங்குமாறு அவள் கேட்டுக்கொண்டாள். நற்செய்தியின் வல்லமையால் மக்கள் உருமாற்றம் அடையும் ஒரு உயிர்த்துடிப்புள்ள இடமாக அவளுடைய வீடு மாறியது.

எனக்குள்ள திறமைகளையும், வரங்களையும், திறன்களையும் நான் தேவனுடைய மகிமைக்காகப் பயன்படுத்துகிறேனா?

Rev. Dr. J.N. Manokaran