சிலர் சில நாடுகளையோ அல்லது நகரங்களையோ பூமியில் சொர்க்கமாகக் கருதுகிறார்கள். அங்கு செல்வதற்காக அவர்கள் தங்கள் முயற்சிகள், ஆற்றல், நேரம், வளங்கள் மற்றும் செல்வம் அனைத்தையும் முதலீடு செய்ய விரும்புகிறார்கள். இருப்பினும், அங்கு சென்றதும், பலருக்கு சிறிய ஏமாற்றம்தான்; ஆனாலும் தங்கள் முடிவு சரியானது தான் என்பது போல ஒரு சாகச முகபாவனையைத் தெரிவிக்கின்றனர். ஒரு பல்கலைக்கழகப் பேராசிரியரும் உயர்நிலைப் பள்ளி ஆசிரியராக இருந்த அவரது மனைவியும் அமெரிக்காவிற்குச் செல்ல முடிவு செய்தனர், அதை அவர்கள் ஏதோ சொர்க்கம் போல் கருதினர். அவர்களின் மகனுடன், அவர்கள் அங்கு சென்றனர். வேலை இல்லாததால், அவர் ஒரு தனியார் ஹோட்டலில் சேவை மேலாளராக வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, அங்கு அவர் சுத்தம் செய்பவராகவும் பராமளிப்பவராகவும் இருந்தார். அவரது மனைவி நர்சிங் பட்டம் பெற வேண்டியிருந்தது, மேலும் ஒரு செவிலியராக வேலை செய்யத் தொடங்கினார். ஆனால், அவர் தனது மனைவியை வேலைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் ஒரு விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். அது உண்மையில் ஒரு கொடிய ஈர்ப்பினால் வந்த விளைவாக இருந்தது.
தப்பித்தல்:
மக்கள் துன்பம் காரணமாக இடம்பெயர்கிறார்கள். பஞ்சம், அரசியல் ஸ்திரமின்மை, பொருளாதார நெருக்கடி மற்றும் குடும்பக் காரணங்கள் போன்ற இயற்கைப் பேரழிவாக இது இருக்கலாம். பஞ்சம் காரணமாக நகோமியும் அவளுடைய குடும்பத்தினரும் இடம்பெயர்ந்தனர் (ரூத் 1:1). சவுலின் அச்சுறுத்தல் காரணமாக, அரசியல் பிரச்சனையினால் தாவீது இடம்பெயர்ந்தான் (1 சாமுவேல் 21:11). யாக்கோபு தனது சகோதரன் ஏசாவுடனான பகை காரணமாக ஓடிப்போக வேண்டியிருந்தது (ஆதியாகமம் 28:5).
மேம்படுத்துங்கள்.. மகிழுங்கள்:
சிலர் தங்கள் சுகபோகம், வருமானம், ஆடம்பரம், சுதந்திரம் மற்றும் பணக்கார வாழ்க்கை முறைக்காக இடம்பெயர்கின்றனர். இருப்பினும், அவர்களின் உயர்ந்த எதிர்பார்ப்புகள் சிதைந்து போகக்கூடும். நிலையான, மற்றவர்களை விட சிறந்த வாழ்க்கை முறை, வாழ்வாதாரம் மற்றும் வாய்ப்புகளைக் கொண்டிருந்த பேராசிரியர் பசுமையான மேய்ச்சல் நிலங்களுக்கு இடம்பெயர்ந்தார். துரதிர்ஷ்டவசமாக, அது அவர் எதிர்பார்க்காமலே திடீர் மரணத்தை சந்தித்தார்.
நித்திய நோக்கம்:
கர்த்தருடைய சீஷர்கள் சூழ்நிலைகளுக்கு ஏற்ப தெரிவுச் செய்யவில்லை, மாறாக தேவ நோக்கம் மற்றும் திட்டத்தின் படி தெரிவுச் செய்கிறார்கள். ஒரு நபர் உலகின் எந்தப் பகுதியிலும் பிறப்பது தற்செயல் நிகழ்வு அல்ல. அவர்கள் எங்கு பிறந்தாலும், தேவன் அவர்களுக்காக ஒரு திட்டத்தை வைத்திருக்கிறார். பெரும்பாலான மக்கள் தங்கள் சூழலில் சேவை செய்ய அழைக்கப்படுவார்கள். ஒரு சிறப்பு நோக்கத்துடன் வேறொரு கலாச்சாரம், சூழல் மற்றும் தேசத்திற்குச் செல்ல சிலர் மட்டுமே அழைக்கப்படுவார்கள். இருப்பினும், அந்த வகையான அழைப்பு தேவனின் முன்முயற்சியாக இருக்க வேண்டும், சுயநல ஆசைகளால் இயக்கப்படக்கூடாது.
நித்திய பரலோகத்திற்குப் பதிலாக, நான் தற்காலிக உலக சொர்க்கத்தைத் தேடுகிறேனா?
Rev. Dr. J.N. Manokaran