அவர் நம்மோடு வாசம் பண்ணும் தேவன்

கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் தம்பதியினருக்கு இடையே கடுமையான சண்டையை நீதிமன்றம் கண்டது.  கணவன்; “இந்தப் பெண்ணுடன் நான் எப்படி வாழ்வேன். வேதாகமத்தில் கூட ஒரு சண்டைக்கார மனைவியுடன் வாழ முடியாது என்று கூறுகிறது, என்றான்.  மனைவி; “கெட்ட பழக்கத்திற்கு அடிமையாக இருப்பவனோடும் கொடுமைக்காரனோடும் யார் வாழ முடியும்? யாருக்கு இரத்தங்கலங்கின கண்கள்? (நீதிமொழிகள் 21:9; 23:29) எனக் கூறினாள். இருப்பினும், இருவரும் பல ஆண்டுகளாக ஒருவரையொருவர் நன்கு அறிந்து, நேசித்து, திருமணம் செய்து கொண்டனர், குழந்தைகள் பெற்றனர். ஆனால் விவாகரத்து செய்ய நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர்.  வயதான பெற்றோரை கவனித்துக் கொள்ள முடியாத குழந்தைகள், வழிதவறிச் செல்லும் மகனை ஏற்றுக்கொள்ள முடியாத நல்ல ஒழுக்கமான தந்தைகள் என ஏராளமான உதாரணங்களைக் காண்கிறோம். இன்னும் சிலர்  முழு மனிதகுலத்தையும் துறந்து துறவிகளாக மாறுகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் குகைகள், பாலைவனங்கள் மற்றும் வனாந்திரத்தில் என மனிதர்களற்ற இடங்களில் வாசம் செய்கிறார்கள். ஆனால் நம் பரிசுத்த தேவனாம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வானத்திலிருந்து பூமிக்கு இறங்கி வருவதை தேர்ந்தெடுத்து பாவமுள்ள மனிதர்களோடு வாசம் பண்ணினார் (யோவான் 1:14).

1) அன்பு அல்லது வெறுப்பு:
மக்கள் ஒருவரை ஒருவர் பார்க்காவிட்டாலும் வெறுப்பு ஏற்படுகிறது; அப்படி பார்த்தாலும் அவர்களின் அசிங்கம், பலவீனம், முட்டாள்தனம் மட்டுமே அவர்களின் மனதில் தோன்றுகிறது. திருமணமாகி குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும் இத்தகைய வெறுப்பு ஏற்படதான் செய்கிறது. இருப்பினும், தேவன் பாவத்தை வெறுத்தாலும் மனிதர்களை நேசிக்கிறார். ஆம், பாவத்தை வெறுக்கிறார் பாவிகளை நேசிக்கிறார்.

2) மீட்பு அல்லது தீர்ப்பு:
வீழ்ந்த மனிதகுலத்தை மீட்பதற்கான வழியை தேவன் திட்டமிடுகிறார்.  தீர்ப்பளிப்பது அவருக்கு எளிதானது தான்; மீட்டெடுப்பதற்கான விலைக்கிரயம் தான் அதிகம்.  ஆம், மீட்பின் விலை என்பது  சிலுவையில் தேவ குமாரனின் மரணம் மற்றும் அவரது உயிர்த்தெழுதல் ஆகும்.  முடிந்தவரை மீட்டெடுக்க முடியும் என்பது கணவன் அல்லது மனைவியிடம் பார்க்க முடியாது, தீர்ப்பளிக்க மட்டுமே முடியும்.

3) மன்னிப்பு அல்லது தண்டனை:
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மன்னிப்பை வழங்க வந்தார், உடனடியாக தண்டனையை அளிப்பதற்கல்ல. கிருபையான மன்னிப்பே ஒரு நபரை தேவனுடனான உறவை மீட்டெடுக்க உதவுகிறது.   நீதிமன்றத்தில் உள்ள தம்பதிகள் மற்றவர்களுக்கு வலியை ஏற்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டினர்.  இருவருக்குமே இது வேதனையளித்த போதிலும் மற்றவரும் வேதனை அனுபவிப்பதே விரும்புகிறார்கள்.

4) மாற்றம் அல்லது விரக்தி:
கர்த்தர் நம்மை மாற்றுவதற்காக நம்மிடையே வாசம் செய்ய வந்தார், நம்மை பயமுறுத்தவில்லை.  புதிய வாழ்க்கையில் முனைப்புடைமை, திசை மற்றும் சேருமிடம் நிறைந்திருக்கும்.  ஆனால் விரக்தி என்பது நம்பிக்கை இல்லாத ஒரு குழி.

அவர் என்னில் வாசம் செய்கிறாரா?  மேலும், நான் மற்றவர்களுடன் சமாதானமாக இருக்கிறேனா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்