ஏதோமியனான தோவேக்

சவுலின் மகன் யோனாத்தான் எச்சரித்ததால், தாவீது தன்னுடைய உயிரைக் காப்பாற்ற ஓடிச் செல்ல வேண்டியிருந்தது. அப்போது ஒரு இரவு அவன் நோபு என்ற ஊருக்கு சென்று அங்கே தங்கினான். அங்கே ஆசாரியனாக இருந்த அபிமெலேக், தாவீதுக்கு தேவாலயத்தில் இருந்த பரிசுத்த அப்பத்தையும், கோலியாத்தின் பட்டயத்தையும் கொடுத்தான். இந்த சம்பவத்தை ஏதோமியனான தோவேக்கு என்பவன் சவுலிடம் தெரிவித்தான். சவுல் கொஞ்சம்கூட தயங்காமல், ஆசாரியனான அபிமெலேக்கையும் அவன் குடும்பத்தினரையும், எல்லா ஆசாரியர்களையும் கொலை செய்யும்படி கட்டளையிட்டான். அந்த உத்தரவின்படி பெண்கள், குழந்தைகள், கால்நடைகள், கழுதைகள் மற்றும் ஆடுகளுடன் 85 ஆசாரியர்களையும் கொன்று கட்டளையை தோவேக்கு நிறைவேற்றினான் (1 சாமுவேல் 21, 22; சங்கீதம் 52).

வலிமையுள்ள மனிதனா?   
தோவேக் உண்மையான வீரன் அல்ல. ஆயுதம் இல்லாத ஆசாரியர்கள், பெண்கள், குழந்தைகளை கொன்றான். தாவீது அவனை "வீரன்" என ஏளனமாகக் கூறினான். உண்மையில், அவன் ஒரு கொடூரன், பயங்கர திணைப்பாளி. போர் அறிமுகமற்றவர்கள் மீது வன்முறை செய்ததைத் தாவீது கண்டித்தான். அவனின் கொடுமைக்கு மற்றும் செய்த காரியத்துக்கு வெட்கப்பட வேண்டுமே தவிர மேன்மை பாராட்ட ஒன்றுமேயில்லை (சங்கீதம் 52).

பெருமை பேசுபவன்:
தோவேக் செய்ததைச் சொல்லும்போது பெருமிதத்துடன் பேசினான். அவன் பெருமைபேச்சு அவனுடைய பயத்துக்கும், சவுலின் அரண்மனையில் நிலைக்கவேண்டிய ஆசைக்கும் காரணமாகும். ஏதோமியனாக, தன்னை நிரூபிக்கவேண்டும் என எண்ணினான். தன்னை உயர்வாக எண்ணினான், ஆனால் உண்மையில் அவனது பெருமை ஒரு பலவீனத்தின் முகமூடி என்றே சொல்லலாம்.

தீமையை நேசித்தலா!?:
தோவேக்கின் மனமும் இருதயமும் தீமை நிறைந்தவை. அதனால் தான் அவன் தீமையையே தேர்ந்தெடுத்தான், அதில் நிம்மதியாய் இருந்தான், இறுதியில் அதை நேசிக்கவும் ஆரம்பித்தான். அவன் தீய இருதயம், கெட்ட சொல்லை உண்டாக்கியது. அவன் நாவும் வார்த்தைகளும் சூழ்ச்சியும், துர்நாற்றமுள்ளவையும் ஆனது (சங்கீதம் 52:2–4).

பொய்:
தோவேக்கின் நாவு மிகவும் தீயது. அவன் வார்த்தைகள் கூரிய கத்தியைப் போல இருந்தன. வெளியிலேயே நன்றாக பேசினாலும், உள்ளே கொடூர நோக்கம் இருந்தது. அவன் முடியை சவரம் செய்வது போல நடித்து, அதே கத்தியை கழுத்து வெட்ட பயன்படுத்தியவன். அவன் நாவும் வார்த்தைகளும் சூழ்ச்சி, பொய், நாசத்தை உருவாக்கும் வகையிலானவை (சங்கீதம் 52:2).

 தேவனின் நன்மை:
தாவீது, தேவனுடைய நல்லதன்மை நிலைத்ததும், உறுதியானதும், மாற்றமற்றதுமானது என நம்பினான். அந்த நன்மைக்காகவே, தாவீது தேவ ஆலயத்தில் ஒலிவ மரம் போல செழித்துப் பெருகுவேன் என்றான் (சங்கீதம் 52:8).

பழிவாங்குதல்: 
தோவேக் மற்றும் அனைத்து துன்மார்க்கரும் தேவனால் அழிக்கப்படுவார்கள். அவர்கள் நெருப்பில் இருந்து பிடித்து அகற்றப்படும் நிலக்கரித் துண்டைப் போலவே பிடித்து இழுத்து அகற்றப்படுவார்கள். அவர்கள் வசிக்கும் பாதுகாப்பான இடத்தில் இருந்து அகற்றப்படுவார்கள். வேர் இல்லாத மரங்களைப் போல, அவர்கள் வேரோடும் பிடுங்கப்படுவார்கள். பலனில்லை என்ற காரணத்தால் மரம் வெட்டப்படுவது போல, அவர்கள் அழிக்கப்படுவார்கள். தேவனைத் தங்கள் பலமாகக் கொண்டிராதவர்கள் மற்றும் தங்கள் செல்வங்களைச் சார்ந்திருப்பவர்கள் மீது இத்தகைய நியாயத்தீர்ப்பு வரும். 

நான் துன்மார்க்கத்தைத் தவிர்த்து தேவனை மாத்திரம் நம்புகிறேனா?  
 

Rev. Dr. J.N. Manokaran