பலருக்குக் கிறிஸ்துமஸ் என்பது பரிசுகளை வழங்கவும் பெறவும் கூடிய ஒரு காலமாகும்.
மிகப்பெரிய துணிவான செயல் (The Greatest Risk):
தேவன் உலகத்தையும் முதல் மனித தம்பதியரான ஆதாம் மற்றும் ஏவாளையும் படைத்தபோது, அவர் ஒரு மிகப் பெரிய அபாயத்தை எடுத்தார். அந்த துணி செயல்; அவர்களுக்கு சுதந்திர விருப்பம் அல்லது சுயாதீனம் (Free Will) அளித்ததே. துரதிர்ஷ்டவசமாக, அந்த சுதந்திரத்தை அவர்கள் தேவனுக்கெதிராகப் பயன்படுத்தி, அவருக்குக் கீழ்ப்படியாமலும், அவருக்கு விரோதமாகக் கலகத்துடனும் நடந்துக் கொண்டார்கள் (ஆதியாகமம் 3).
மிகப்பெரிய வீழ்ச்சி (The Greatest Fall):
“ஹம்ப்டி டம்ப்டி” எனும் முட்டை கதையைப் போல, மனிதனின் வீழ்ச்சி திரும்பச் சீரமைக்க முடியாத அளவுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. அந்தப் பாடலில்,
“அனைத்து ராஜாவின் குதிரைகளாலும் மனிதர்களாலும் கூட ஹம்ப்டி டம்ப்டியை மீண்டும் சேர்க்க முடியவில்லை” என்று கூறப்படுகிறது. அதேபோல, மனிதன் வீழ்ந்த பிறகு, உலகின் சிறந்த வளங்களாலும், அறிவாலும், நிபுணத்துவத்தாலும், அதிகாரத்தாலும், கருவிகளாலும் கூட அந்த முறிந்த மனிதனை மீண்டும் உருவாக்க முடியவில்லை.
மிகப்பெரிய கிருபை (The Greatest Grace):
மனிதகுலம் முழுமையான நம்பிக்கையற்ற நிலையில் இருந்தபோது, தேவனுடைய மிகப்பெரிய கிருபை வெளிப்பட்டது.
பாவிகள் தங்களைத் தாங்களே இரட்சிக்க முடியாது; மற்ற யாரும் அவர்களுக்குப் பரிகாரம் செய்யவும் இயலாது. ஆகவே தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை உலகத்திற்குத் தந்தார். அவர் தம்முடைய மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல் மூலமாக புதிய சிருஷ்டியின் அதிசயத்தை நிகழ்த்தினார் (யோவான் 3:16).
மிகச் சிறந்த பரிசு (The Greatest Gift):
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே மனிதகுலத்திற்குக் கொடுக்கப்பட்ட விளக்க முடியாத, சிறந்த, மகத்தான பரிசு. அவரின் மூலம் தேவன் மனிதருக்குப் பாவமன்னிப்பை அளித்துள்ளார். இந்த அற்புதமான பரிசு அனைத்து மனிதர்களுக்கும் கிடைக்கக்கூடியதாக உள்ளது.
ஆச்சரியமானது என்னவெனில், இந்த நற்செய்தியைப் பகிரும் பொறுப்பு, தேவனுடைய தூதர்களுக்கல்ல; கர்த்தராகிய இயேசுவை விசுவாசிக்கும் எளிய மனிதர்களுக்கே கொடுக்கப்பட்டுள்ளது.
மிகப்பெரிய செய்தி (The Greatest Message):
திருச்சபை இருப்பதன் நோக்கம் அருட்பணி. ஒவ்வொரு சீஷனும் மற்ற சீஷர்களை உருவாக்கவே அழைக்கப்பட்டுள்ளான். மனித வரலாற்றில் நற்செய்தியை அறிவிக்கவும், பரப்பவும், பிரசங்கிக்கவும் திருச்சபை தேவனால் நிறுவப்பட்டு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஒரே ஒரு பாவி மனந்திரும்பினாலும், பரலோகத்தில் பெரும் சந்தோஷம் உண்டாகும் (லூக்கா 15:10).
மிகப்பெரிய அழைப்பு (The Greatest Call):
இன்றைய காலத்தில் திருச்சபை அனைத்து மனிதர்களுக்கும் மிகப்பெரிய அழைப்பை அளிக்கிறது. மனந்திரும்பி, இருளிலிருந்து வெளிச்சத்திற்கும், சாத்தானின் அடிமைத்தனத்திலிருந்து தேவனுடைய ராஜ்யத்திற்கும் வந்து, பாவமன்னிப்பின் செய்தியைப் பெற்றுக்கொள்ளுங்கள் (அப்போஸ்தலர் 17:30–31). ஒவ்வொரு வாசகரும் கர்த்தருக்காக தீவிரமும் கட்டுப்பாடும் கொண்ட சீஷர் உருவாக்குபவராக மாற ஊக்கப்படுத்தப்பட வேண்டும்.
இந்த மாபெரும் பரிசை நீங்கள் பெற்றுக்கொண்டீர்களா?
Rev. Dr. J.N. Manokaran