மனிதர்கள் ஆணவத்துடன் இருக்க முடியுமா என்றால், மனிதர்களால் உருவாக்கப்பட்ட AI-யும் அப்படித்தான். AI-யால் இயங்கும் டெத் கடிகாரம் ஒரு பயனரின் மரணத்தின் சரியான தேதியைக் கணிப்பதாகக் கூறுகிறது. வருடத்திற்கு இந்திய ரூபாய் 3,482.51 செலவாகும். இந்த செயலியை ஏற்கனவே 125,000 பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இது வாழ்க்கை முறை மாற்றங்களையும் பரிந்துரைக்கிறது. சுமார் 5.3 கோடி பங்கேற்பாளர்கள் சம்பந்தப்பட்ட 1,200க்கும் மேற்பட்ட ஆயுட்கால ஆய்வுகளின் தரவுத்தொகுப்பில் AI பயிற்சி அளிக்கப்படுகிறது. உணவுமுறை, உடற்பயிற்சி, பதட்டம், மன அழுத்த அளவுகள் மற்றும் தூக்கப் பழக்கம் போன்ற காரணிகள் இறப்பு தேதியை மதிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன (NDTV, டிசம்பர் 1, 2024).
மரண பயம்:
பலர் மரணத்திற்கு அஞ்சுகிறார்கள், ஆனால் விசுவாசிகள் இந்த பயத்திலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள் (எபிரெயர் 2:15). நிச்சயமற்ற தன்மை காரணமாக, மக்கள் எதிர்காலத்தைப் பற்றிய ஒரு தேடலில் காணப்படுகிறார்கள். எதிர்காலத்திற்கும் அவர்தான் தேவன் என அறியாதவர்கள் பெரும்பாலும் அடுத்து என்ன ஆகுமோ என்பதாக கவலைப்படுகிறார்கள்.
போலி எதிர்காலவாதிகள்:
பலர் ஜோதிடம், அதிர்ஷ்டம் மற்றும் பொருளாதாரத்தை நம்புவதன் மூலம் வாழ்க்கையை நடத்துகிறார்கள். ஜோதிடம் நட்சத்திரங்களின் நிலையை கணிக்க முயற்சிக்கிறது, சில இடங்களில், கிளிகள் கூட அதிர்ஷ்ட அட்டைகளைத் தேர்ந்தெடுக்கப் பயன்படுத்தப்படுகின்றன. கைரேகை, முகரேகை, கையெழுத்து பகுப்பாய்வு, சகுன விளக்கம், ஜோசிய சீட்டுகள், மாயக்கற்கள், தாயங்கள் மற்றும் ஆவி தொடர்புகள் ஆகியவை பொதுவான கணிப்பு நடைமுறைகளாகும். எண் கணிதம் மூடநம்பிக்கை கொண்டவர்கள், தன்னம்பிக்கை இல்லாதவர்கள் மற்றும் உண்மையான கடவுளை அறியாதவர்களையும் ஈர்க்கிறது. இத்தகைய கணிப்புகள் தீய ஆவிகள், மாய அனுபவங்கள், ஊகம், அனுமானங்கள், உள்ளுணர்வு மற்றும் கற்பனையை அடிப்படையாகக் கொண்டவையாகும்.
காலங்கள் கர்த்தரின் கரத்தில் உள்ளது:
எதிர்காலத்தின் மீது தேவனின் அதிகாரத்தை ஒப்புக்கொள்ளும்படி அப்போஸ்தலனாகிய யாக்கோபு விசுவாசிகளுக்கு அறிவுறுத்துகிறார். அதாவது “தேவனின் விருப்பம் இருந்தால் நாம் வாழ்வோம். இதை அல்லது அதைச் செய்வோம் என்று எண்ணுங்கள்” (யாக்கோபு 4:15). இந்த சொற்றொடர் பணிவு, தேவனின் இறையாண்மைக்குக் கீழ்ப்படிதல் மற்றும் அவரது கிருபையை நம்பியிருப்பதை பிரதிபலிக்கிறது.
வாழ்க்கையின் அர்த்தமும் நோக்கமும்:
உண்மையான ஞானம் என்பது ஒவ்வொரு நாளையும் தேவனின் மகிமைக்காகப் பயன்படுத்துவதாகும். ஒவ்வொரு நபருக்கும் ஒதுக்கப்பட்ட நாட்களின் எண்ணிக்கையை அவர் மட்டுமே தீர்மானிக்கிறார் (யோபு 14:5). மோசே தனது நாட்களை உகந்ததாகவும் நோக்கமாகவும் பயன்படுத்த ஞானத்திற்காக ஜெபித்தான் (சங்கீதம் 90:12). தேவனே, நாங்கள் உண்மையிலேயே ஞானமுடையவர்களாகும்படி எங்கள் வாழ்க்கை எத்தனை குறுகியது என்பதை எங்களுக்குக் கற்பியும்.
மரணத்தைப் பற்றி கவலைப்படுவதற்குப் பதிலாக என் வாழ்க்கையை அவருடைய மகிமைக்காகப் பயன்படுத்துகிறேனா? சிந்திப்போம் செயல்படுவோம்.
Rev. Dr. J.N. Manokaran