ஒரு மகத்தான கதை

சிலர் வேதாகமம் பல வகையான இலக்கியங்களின் தொகுப்பாக இருப்பதால், ஒத்திசைவு இல்லாமல் குழப்பமாக இருக்கிறது என்று நினைக்கிறார்கள். ஆனால் M.R. கொன்ராட் கூறுவதைப் போல, வேதாகமம் ஒரே கதையைக் கூறுகிறது என்பதற்காக குறைந்தது எட்டு ஆதாரங்கள் உள்ளன (rootedthinking.com). வேதாகமத்தைப் படிக்கும் போது முழுப் படத்தைக் கருத்தில் கொண்டு படித்தால், ஒவ்வொரு பகுதியும் நன்றாக புரியும். இது சுவாரஸ்யமாக இருக்கிறது மட்டுமல்ல; அதை வாசிப்பவர்களின் வாழ்க்கையையும் மாற்றும்.

ஒரு முக்கிய கதாபாத்திரம்:
இக்கதையின் முக்கிய நபர் தேவன். அவர் உலகத்தைப் படைத்தார்; தன் மக்களை அவர் தனது நித்திய வீட்டில் ஏற்றுக் கொள்வார் (ஆதியாகமம் 1:1).
ஒரு ஆசிரியர்:                              வேதாகமம் மனிதர்களால் எழுதப்பட்டது என்றாலும், அது முழுமையாக பரிசுத்த ஆவியானவரால் ஊக்கமளிக்கப்பட்டது. நாற்பது பேர், வேறு வேறு காலங்களில், சுமார் 1600 ஆண்டுகளாக எழுதியிருந்தாலும், அவர்களை வழிநடத்தியது தேவனுடைய ஆவியானவரே (2 தீமோத்தேயு 3:16; 2 பேதுரு 1:21).
அமைப்புகள்: 
இந்தக் கதை ஆதியாகமம் அதிகாரம் 1-ல் காணப்படும் பரிபூரணமான ஏதேன் தோட்டத்தில் துவங்குகிறது. இது வெளிப்படுத்தல் அதிகாரம் 22-ல் உள்ள நித்திய பரிபூரண தோட்டத்தில் முடிவடைகிறது.

மோதல் மற்றும் உச்சக்கட்டம்: 
சாத்தானால் வஞ்சிக்கப்படுவதன் மூலம் ஆதாமும் ஏவாளும் பாவம் செய்தனர்.  இருப்பினும், தேவன் தனது முதல் திட்டத்தை நிறைவேற்றுகிறார். சிலுவையில் சாத்தானாகிய பாம்பின் தலை நசுக்கப்பட்டது. ஆண்டவர் இயேசு, மரணத்தை ஜெயித்து உயிர்த்தெழுவதன் மூலம் இந்நிலையைக் கடந்து வெற்றியை பெற்றார். இறுதியில், மனிதன் மீட்டெடுக்கப்பட்டு படைப்பின் மீது ஆதிக்கம் செலுத்துகிறான், ஆயிர வருட ராஜ்யத்தில் கர்த்தராகிய இயேசுவுடன் ஆட்சி செய்கிறான்.

வம்சாவளி: 
பைபிள் முழுவதும் ஒரே கதையை அதாவது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் கதையைச் சொல்லுகிறது. பழைய ஏற்பாட்டும் புதிய ஏற்பாட்டும் ஒருங்கிணைந்து ஒரே திட்டத்தை வெளிப்படுத்துகின்றன. மத்தேயு 1 ஆம் அதிகாரம், இயேசுவின் வம்சாவளியை ஆபிரகாமை வரை கொண்டு செல்கிறது, ஆனால் லூக்கா 3 ஆம் அதிகாரம் அதைவிடத் தெளிவாக ஆதாம் வரை கொண்டு செல்கிறது. 

அவரை நோக்கி எதிர்நோக்குதல்:
பழைய ஏற்பாடு, இரட்சகரான கிறிஸ்துவின் முதல் வருகையை எதிர்நோக்குகிறது. புதிய ஏற்பாடு, அவர் மகிமையுடன் வரவிருக்கும் இரண்டாம் வருகையை நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறது.

பதற்றம் எழுகிறது: 
வேதாகமத்தில் உள்ள பல முக்கிய நூல்கள், ஒரு முழுமை அல்லது முடிவில்லாமல் நிறைவடைகின்றன. ஒவ்வொன்றும் ஒரு எதிர்பார்ப்பையும், தேவனுடைய திட்டம் இன்னும் நிறைவேற வேண்டியதென்பதையும் உணர்த்துகின்றன.
ஆதியாகமம்: தேவனுடைய மக்கள் எகிப்தில் அடிமையாய் இருக்கிறார்கள். 
யாத்திராகமம்: இஸ்ரவேல் மக்கள் பாலைவனத்தில் பயணிக்கின்றனர்; 
இரண்டாம் நாளாகமம்: இஸ்ரவேல் மக்கள் பாபிலோனில் சிறைவாசத்தில் இருக்கிறார்கள்; அவர்கள் தாய்நாட்டிற்கு திரும்பவில்லை.
அப்போஸ்தலர்: பவுல் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் முடிகிறது; ஆக நற்செய்தி அனைத்து நாடுகளுக்கும் செல்லும் பணி இன்னும் தொடர வேண்டும். இந்த எல்லா “முடிவில்லாத” நிலைகளும் ஒரு பெரிய முடிவை நோக்கி வழிகாட்டுகின்றன. அந்த உண்மையான நிறைவு, வேதாகமத்தின் கடைசி பகுதியில்; பரிசுத்தர்கள் பரலோகத்தில் ஆண்டவரோடு சேரும் அந்த நாளில்தான் நிகழும்.

உடன்படிக்கைகள் மற்றும் தீர்க்கதரிசனங்கள்: 
 தேவன் ஒரு வாக்குறுதியை அளிக்கும்போது, அது நிச்சயமாக நிறைவேறும். தேவனுடைய உடன்படிக்கைகள் உண்மையானவை; அவரின் தீர்க்கதரிசனங்களும் அப்படியே நிகழும். சில தீர்க்கதரிசனங்கள் ஏற்கனவே நிறைவேறியுள்ளன, மற்றவைகள் எதிர்காலத்தில் நிறைவேறும்.

வேதாகமம் ஒரு மகத்தான கதை என்று நான் விசுவாசிக்கிறேனா?

Rev. Dr. J.N. Manokaran