வெண்ணிலவுக்கு சுயஒளி சிறிதேனுமில்லை,
வெங்கதிரோன் ஒளியினை பிரதிபளித்து,
தரணிக்குத் தண்நிலவாய் காட்சி தரும்.(ஏதேனில்)
தரமிழந்த மானுடர்க்கும் அருளொளி இல்லை
தன்னிகரில் இல்லா இயேசுகிறிஸ்துவின் இன்னருளை
தன்னகத்தே கொண்டு நீ பிரதிபளித்தால்
அன்பின் பெட்டகமாய் அவனியில் வாழ்ந்து
ஆண்டவரை அனைவரும் அறியச் செய்திடலாம்.