ரோமர் 15:1-7

15:1 அன்றியும், பலமுள்ளவர்களாகிய நாம் நமக்கே பிரியமாய் நடவாமல், பலவீனருடைய பலவீனங்களைத் தாங்கவேண்டும்.
15:2 நம்மில் ஒவ்வொருவனும் பிறனுடைய பக்திவிருத்திக்கேதுவான நன்மையுண்டாகும்படி அவனுக்குப் பிரியமாய் நடக்கக்கடவன்.
15:3 கிறிஸ்துவும் தமக்கே பிரியமாய் நடவாமல்: உம்மை நிந்திக்கிறவர்களுடைய நிந்தைகள் என்மேல் விழுந்தது என்று எழுதியிருக்கிறபடியே நடந்தார்.
15:4 தேவவசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் நாம் நம்பிக்கையுள்ளவர்களாகும்படிக்கு, முன்பு எழுதியிருக்கிறவைகளெல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது.
15:5 நீங்கள் ஒருமனப்பட்டு நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனை ஒரே வாயினால் மகிமைப்படுத்தும்படிக்கு,
15:6 பொறுமையையும் ஆறுதலையும் அளிக்கும் தேவன், கிறிஸ்து இயேசுவினுடைய மாதிரியின்படியே, நீங்கள் ஏகசிந்தையுள்ளவர்களாயிருக்கும்படி உங்களுக்கு அநுக்கிரகஞ்செய்வாராக.
15:7 ஆதலால் தேவனுக்கு மகிமையுண்டாக, கிறிஸ்து நம்மை ஏற்றுக்கொண்டதுபோல, நீங்களும் ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ளுங்கள்.




Related Topics


அன்றியும் , பலமுள்ளவர்களாகிய , நாம் , நமக்கே , பிரியமாய் , நடவாமல் , பலவீனருடைய , பலவீனங்களைத் , தாங்கவேண்டும் , ரோமர் 15:1 , ரோமர் , ரோமர் IN TAMIL BIBLE , ரோமர் IN TAMIL , ரோமர் 15 TAMIL BIBLE , ரோமர் 15 IN TAMIL , ரோமர் 15 1 IN TAMIL , ரோமர் 15 1 IN TAMIL BIBLE , ரோமர் 15 IN ENGLISH , TAMIL BIBLE Romans 15 , TAMIL BIBLE Romans , Romans IN TAMIL BIBLE , Romans IN TAMIL , Romans 15 TAMIL BIBLE , Romans 15 IN TAMIL , Romans 15 1 IN TAMIL , Romans 15 1 IN TAMIL BIBLE . Romans 15 IN ENGLISH ,