நீதிமொழிகள் 23:29-35

23:29 ஐயோ! யாருக்கு வேதனை யாருக்குத் துக்கம்? யாருக்குச் சண்டைகள்? யாருக்குப் புலம்பல்? யாருக்குக் காரணமில்லாத காயங்கள்? யாருக்கு இரத்தங்கலங்கின கண்கள்?
23:30 மதுபானம் இருக்கும் இடத்திலே தங்கித் தரிப்பவர்களுக்கும், கலப்புள்ள சாராயத்தை நாடுகிறவர்களுக்குந்தானே.
23:31 மதுபானம் இரத்தவருணமாயிருந்து, பாத்திரத்தில் பளபளப்பாய்த் தோன்றும்போது, நீ அதைப் பாராதே; அது மெதுவாய் இறங்கும்.
23:32 முடிவிலே அது பாம்பைப்போல் கடிக்கும், விரியனைப்போல் தீண்டும்.
23:33 உன் கண்கள் பரஸ்திரீகளை நோக்கும்; உன் உள்ளம் தாறுமாறானவைகளைப் பேசும்.
23:34 நீ நடுக்கடலிலே சயனித்திருக்கிறவனைப்போலும், பாய்மரத்தட்டிலே படுத்திருக்கிறவனைப்போலும் இருப்பாய்.
23:35 என்னை அடித்தார்கள், எனக்கு நோகவில்லை; என்னை அறைந்தார்கள், எனக்குச் சுரணையில்லை; நான் அதைப் பின்னும் தொடர்ந்து தேட எப்பொழுது விழிப்பேன் என்பாய்.




Related Topics


ஐயோ! , யாருக்கு , வேதனை , யாருக்குத் , துக்கம்? , யாருக்குச் , சண்டைகள்? , யாருக்குப் , புலம்பல்? , யாருக்குக் , காரணமில்லாத , காயங்கள்? , யாருக்கு , இரத்தங்கலங்கின , கண்கள்? , நீதிமொழிகள் 23:29 , நீதிமொழிகள் , நீதிமொழிகள் IN TAMIL BIBLE , நீதிமொழிகள் IN TAMIL , நீதிமொழிகள் 23 TAMIL BIBLE , நீதிமொழிகள் 23 IN TAMIL , நீதிமொழிகள் 23 29 IN TAMIL , நீதிமொழிகள் 23 29 IN TAMIL BIBLE , நீதிமொழிகள் 23 IN ENGLISH , TAMIL BIBLE PROVERBS 23 , TAMIL BIBLE PROVERBS , PROVERBS IN TAMIL BIBLE , PROVERBS IN TAMIL , PROVERBS 23 TAMIL BIBLE , PROVERBS 23 IN TAMIL , PROVERBS 23 29 IN TAMIL , PROVERBS 23 29 IN TAMIL BIBLE . PROVERBS 23 IN ENGLISH ,