புலம்பல் 3:17-26

3:17 என் ஆத்துமாவைச் சமாதானத்துக்குத் தூரமாக்கினார்; சுகத்தை மறந்தேன்.
3:18 என் பெலனும் நான் கர்த்தருக்குக் காத்திருந்த நம்பிக்கையும் அழிந்துபோயிற்று என்றேன்.
3:19 எட்டியும் பிச்சுமாகிய என் சிறுமையையும் என் தவிப்பையும் நினைத்தருளும்.
3:20 என் ஆத்துமா அவைகளை நினைத்து நினைத்து எனக்குள் முறிந்துபோகிறது.
3:21 இதை என் மனதிலே வைத்து, நம்பிக்கைகொண்டிருப்பேன்.
3:22 நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை.
3:23 அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரிதாயிருக்கிறது.
3:24 கர்த்தர் என் பங்கு என்று என் ஆத்துமா சொல்லும்; ஆகையால் அவரிடத்தில் நம்பிக்கைகொண்டிருப்பேன்.
3:25 தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும் தம்மைத் தேடுகிற ஆத்துமாவுக்கும் கர்த்தர் நல்லவர்.
3:26 கர்த்தருடைய இரட்சிப்புக்கு நம்பிக்கையோடு காத்திருக்கிறது நல்லது.




Related Topics


என் , ஆத்துமாவைச் , சமாதானத்துக்குத் , தூரமாக்கினார்; , சுகத்தை , மறந்தேன் , புலம்பல் 3:17 , புலம்பல் , புலம்பல் IN TAMIL BIBLE , புலம்பல் IN TAMIL , புலம்பல் 3 TAMIL BIBLE , புலம்பல் 3 IN TAMIL , புலம்பல் 3 17 IN TAMIL , புலம்பல் 3 17 IN TAMIL BIBLE , புலம்பல் 3 IN ENGLISH , TAMIL BIBLE LAMENTATIONS 3 , TAMIL BIBLE LAMENTATIONS , LAMENTATIONS IN TAMIL BIBLE , LAMENTATIONS IN TAMIL , LAMENTATIONS 3 TAMIL BIBLE , LAMENTATIONS 3 IN TAMIL , LAMENTATIONS 3 17 IN TAMIL , LAMENTATIONS 3 17 IN TAMIL BIBLE . LAMENTATIONS 3 IN ENGLISH ,