யோபு 37:1-7

37:1 இதினால் என் இருதயம் தத்தளித்து, தன்னிடத்தைவிட்டுத் தெறிக்கிறது.
37:2 அவருடைய சத்தத்தினால் உண்டாகிற அதிர்ச்சியையும், அவர் வாயிலிருந்து புறப்படுகிற முழக்கத்தையும் கவனமாய்க் கேளுங்கள்.
37:3 அவர் வானத்தின் கீழெங்கும் அந்தத் தொனியையும், பூமியின் கடையாந்தரங்கள்மேல் அதின் மின்னலையும் செல்லவிடுகிறார்.
37:4 அதற்குப்பின்பு அவர் சத்தமாய் முழங்கி, தம்முடைய மகத்துவத்தின் சத்தத்தைக் குமுறப்பண்ணுகிறார்; அவருடைய சத்தம் கேட்கப்படும்போது அதைத் தவிர்க்கமுடியாது.
37:5 தேவன் தம்முடைய சத்தத்தை ஆச்சரியமானவிதமாய்க் குமுறப்பண்ணுகிறார்; நாம் கிரகிக்கக் கூடாத பெரியகாரியங்களை அவர் செய்கிறார்.
37:6 அவர் உறைந்த மழையையும், கல்மழையையும் தம்முடைய வல்லமையின் பெருமழையையும் பார்த்து: பூமியின்மேல் பெய்யுங்கள் என்று கட்டளையிடுகிறார்.
37:7 தாம் உண்டாக்கின சகல மனுஷரும் தம்மை அறியும்படிக்கு, அவர் சகல மனுஷருடைய கையையும் முத்திரித்துப்போடுகிறார்.




Related Topics


இதினால் , என் , இருதயம் , தத்தளித்து , தன்னிடத்தைவிட்டுத் , தெறிக்கிறது , யோபு 37:1 , யோபு , யோபு IN TAMIL BIBLE , யோபு IN TAMIL , யோபு 37 TAMIL BIBLE , யோபு 37 IN TAMIL , யோபு 37 1 IN TAMIL , யோபு 37 1 IN TAMIL BIBLE , யோபு 37 IN ENGLISH , TAMIL BIBLE JOB 37 , TAMIL BIBLE JOB , JOB IN TAMIL BIBLE , JOB IN TAMIL , JOB 37 TAMIL BIBLE , JOB 37 IN TAMIL , JOB 37 1 IN TAMIL , JOB 37 1 IN TAMIL BIBLE . JOB 37 IN ENGLISH ,